பிள்ளைகள் தங்கள் வருமானத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வயது முதிர்ந்த பெற்றோர்களின் பொருளாதார பாதுகாப்புக்கு வழி செய்யும் நோக்கில், கடந்த 2006-ஆம் ஆண்டின் மூத்த குடிமக்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் தங்களுடைய வருவாயின் 5 முதல் 10 சதவீதம் வரையிலான பகுதியை கட்டாயமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தனர்.