ஜகார்தா: இந்தோனேசியாவில் ஞாயிறு காலை ரிக்டர் அளவுகோளில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 9.10 மணியளவில் அந்நாட்டில் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடக்கு மலுகு பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.