வங்கேதச முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஹுசைன் முகமது அர்ஷத் (91), உடல் நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து கடந்த 1982-ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சியின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து, 1986-ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து அதிபராகப் பொறுப்பேற்றார்.
எனினும், மக்கள் போராட்டம் காரணமாக 8 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு அவர் விலகினார்.
சர்வாதிகார ஆட்சி நடத்தியிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் முகமது அர்ஷத் மென்மையான சுபாவம் கொண்டவர் எனவும், கவிதைகள் புனைவதில் அவர் வல்லவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.