நிலவில் மனிதன் கால் பதித்ததன் 50 ஆண்டுகள் நிறைவு: டூடுல் வெளியிட்டது கூகுள்

நிலவில் மனிதன் கால் பதித்ததன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது.
நிலவில் மனிதன் கால் பதித்ததன் 50 ஆண்டுகள் நிறைவு: டூடுல் வெளியிட்டது கூகுள்


நிலவில் மனிதன் கால் பதித்ததன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது.

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி நாசாவின் அப்போலோ 11 மிஷன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைக் கோளில்தான் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர்.

இந்த செயற்கைக் கோள் 102 மணி நேரம் பயணித்து இதே நாளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது.  

நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் தடத்தைப் பதித்தார். அங்கு 8 நாட்கள் இருந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, ஜூலை 24ம் தேதி மீண்டும் பூமிக்குத் திரும்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com