ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது சவூதி அரேபியா

யேமன் கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய இரு ஆளில்லா தாக்குதல் விமானங்களை தங்களது வான்பாதுகாப்புப் படைப் பிரிவு சுட்டுவீழ்த்தியதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது சவூதி அரேபியா


யேமன் கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய இரு ஆளில்லா தாக்குதல் விமானங்களை தங்களது வான்பாதுகாப்புப் படைப் பிரிவு சுட்டுவீழ்த்தியதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சவூதி அரேபியாவிலுள்ள காமிஸ் முஷேத் பகுதியைக் குறிவைத்து, யேமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
எனினும், அந்தத் தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்திய இரு ஆளில்லா விமானங்களை சவூதி வான்பாதுகாப்புப் படைப் பிரிவு சுட்டு வீழ்த்தியது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், காமிஸ் முஷேத் பகுதியிலுள்ள மன்னர் காலித் விமான தளத்தைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com