மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வன்முறை, வறுமை, கெளதமாலா வழியாக அமெரிக்கா செல்வதற்காக வரும் ஏராளமான அகதிகள் ஆகிய பிரச்னைகள் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகித்தன.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்த முன்னாள் அட்டர்னி ஜெனரல் தெல்மா அல்டானா (படம்) இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.