சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, 31 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அந்த மாகாணத்தின் காங்ஸியான் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவானது. இந்த மாகாணத்தில் இந்த மாதம் 17-ஆம் தேதி ஏற்பட்ட 6 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்ததது நினைவுகூரத்தக்கது.