தென்கொரியா நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த வாரம் அரசு முறை பயணமாக செல்லவுள்ளார்.
ஜப்பான் நாட்டில் ஜி 20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டுவிட்டு, தென்கொரியாவுக்கு டிரம்ப் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே-யின் உடன் வடகொரியா நாட்டுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதேபோல், வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளை பிரிக்கும் பகுதிக்கும் டிரம்ப் செல்லவுள்ளார்.
முன்னதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு டிரம்ப் அண்மையில் அணுஆயுத விவகார பேச்சுவார்த்தை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தென்கொரியாவுக்கு டிரம்ப் சுற்றுப்பயணம் செல்கிறார். இதனால் அவரது சுற்றுப்பயணம் கொரிய தீபகற்ப மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.