மத்திய அமெரிக்க நாடானகோஸ்டா ரிகா - பனாமா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பனாமாவின் பிராக்ரெúஸா நகருக்கு 2 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பரவலாக இருந்ததால், அதன் விளைவாக உயிர்ச் சேதங்களோ, பொருள் சேதங்களோ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அந்த மையம்தெரிவித்துள்ளது.