நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்தனர். மற்றொரு பகுதிக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் இந்த குழாயில் வெள்ளிக்கிழமை சிறு அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக பெரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அதில் பணியாற்றிய 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விபத்து தொடர்பாக அந்த எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஏற்படும் விபத்து காரணமாக நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளதாக கூறி தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.