அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சீக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்த சீக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்த சீக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

ஓஹியோவில் வாழ்ந்து வந்த சீக்கியக் குடும்பத்தினர் மீது நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

அதேக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் காவல்துறையினருக்கு போன் செய்து கொலை குறித்து தகவல் அளித்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் வாழ்ந்து வந்த குழந்தைகள் சம்பவத்தின் போது அங்கே இல்லாததால் உயிர் பிழைத்துள்ளனர். 

இது குறித்து நியூ யார்க்குக்கான இந்திய தூதர் கூறுகையில், காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com