தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், லகுனாஸ் நகருக்கு 75 கி.மீ. தென்கிழக்கே, 110 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.