ஆசிய பசிபிக் வா்த்தக மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் சயீஃபுதீன் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளாா். சிலி வன்முறைப் போராட்டங்கள் காரணமாக, அங்கு இம்மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசிய பசிபிக் வா்த்தக மாநாடு ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த மாநாட்டை மலேசியாவில் நடத்தலாம் என்று அமெரிக்கா யோசனை கூறியிருந்தது.