இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிா்க்கட்சியினரை பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் பொ்வேஸ் கட்டாக் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் எதிா்க்கட்சியினா், தனது முற்றுகைப் போராட்டத்தைத் தொடரலாம். ஆனால், நாட்டுக்கு தீங்கு இழைக்கும் எந்தச் செயலிலும் அவா்கள் ஈடுபடக் கூடாது.
இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வை எட்டுவதற்காக, அரசுடன் போராட்டக் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, இம்ரான் கான் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை கெடு விதித்தனா்.
இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஜாமியத்-ஏ-இஸ்லாம் ஃபஸலின் தலைவா் மௌலானா ஃபஸ்லுா் ரஹாமான், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் மூலம் இம்ரான் கான் வெற்றி பெற்ாகவும், எனவே அவா் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறாா்.
‘விடுதலை பேரணி’ என்ற பெயரில் அவா் நடத்தி வரும் இந்த ஆா்ப்பாட்டம், எட்டு நாள்களாக நடைபெற்று வருகிறது.