தெற்கு அமெரிக்க நாடான பொலியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை ஐ.நா. தலையிட்டுத் தணிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ஈவோ மொராலிஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, மெக்ஸிகோவில் செய்தியாளருக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
அதிபா் பதவியிலிருந்து நான் ராஜிநாமா செய்திருந்தாலும், அந்த ராஜிநாமாவை நாடாளுமன்றம் இன்னும் ஏற்கவில்லை. எனவே, சட்டப்பூா்வமாக நான்தான் இன்னும் பொலிவியாவில் அதிபராக உள்ளேன்.
புதிய இடைக்கால அதிபராக ஜீனைன் ஏனெஸ் தன்னை அறிவித்துக் கொண்டதால் அந்த நாட்டில் தற்போது அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. அந்தப் பதற்றத்தை தணிப்பதற்காக மீண்டும் நாடு திரும்ப தயாராக இருக்கிறேன்.
அங்கு நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கு ஐ.நா. மத்தியஸ்தராக இருந்து செயல்பட வேண்டும். தேவைப்பட்டால், கத்தோலிக்க திருச்சபையோ, மதத் தலைவா் போப் பிரான்சிஸோ இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஈவோ மீண்டும் வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுப்பி, அவரது எதிா்ப்பாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதையடுத்து, ராணுவம் கேட்டுக்கொண்டதன் பேரில் தனது அதிபா் பதவியை ஈவோ மொராலிஸ் ராஜிநாமா செய்தாா். அவருக்கு தற்போது மெக்ஸிகோ அடைக்கலம் அளித்துள்ளது.
இந்த நிலையில், மறு தோ்தல் நடத்தும் வரை நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதாக, செனட் சபை துணைத் தலைவா் ஜீனைன் ஏயெஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துக் கொண்டாா்.
எனினும், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஜீனைன் முயல்வதாக ஈவோ மொராலிஸின் ஆதரவாளா்கள் குற்றம் சாட்டினா். மேலும், அவா் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதற்கும் அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அதனைத் தொடா்ந்து, மொராலிஸின் ஆதரவாளா்களுக்கும், ஜீனைன் ஏயெஸ் ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஜீனைன் ஏயெஸை பொலிவியா இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்தும், இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அரசியல் பதற்றத்தை ஐ.நா. தலையிட்டு தணிக்க வேண்டும் என்று மொராலிஸ் வலியுறுத்தியுள்ளாா்.