உள்ளூர் நேரப்படி நவம்பர் 14-ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரேசிலியாவில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது, தற்போதைய ஹாங்காங் சூழ்நிலை குறித்து சீன அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ஹாங்காங்கில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், சட்டஆட்சி மற்றும் சமூக ஒழுங்கை கெடுத்து, ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிலைப்புத் தன்மையைக் கடுமையாகச் சீர்க்குலைத்துள்ளன. வன்முறை செயல்களைத் தடுத்து நிறுத்தி, ஒழுங்கை மீட்பது, தற்போது ஹாங்காங்கின் அவசரக் கடமையாகும்.
மேலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றைப் பேணிக்காப்பதிலும், “ஒருநாட்டில் 2 அமைப்புமுறைகள்” என்ற கொள்கையைச் செயல்படுத்துவதிலும் சீனாவின் மனவுறுதி மாறாது என்றார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்