தற்போதைய ஹாங்காங் சூழ்நிலை தொடர்பாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14-ஆம் நாள் முதன்முறையாகச் சர்வதேச சமூகத்திற்கு சீன அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், வன்முறைச் செயல்களைத் தடுத்து நிறுத்தி ஒழுங்கை மீட்பது, தற்போது ஹாங்காங்கின் அவசரக் கடமையாகும் என்று குறிப்பிட்டார். ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு சட்டப்படி ஹாங்காங் பிரச்னையைக் கையாள்வதைச் சீன நடுவண் அரசு ஆதரிக்கும் நிலைப்பாட்டை இது சர்வதேசச் சமூகத்துக்குத் தெளிவாக காட்டுகின்றது.
ஹாங்காங்கில் சட்ட வரைவுத் திருத்தம் ஒன்றுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பின், மேலை நாடுகளைச் சேர்ந்த சிலர், வெளிப்படையாகப் பேச முடியாத அரசியல் நோக்கத்தை நனவாக்கும் வகையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைவர் மீதும் ஹாங்காங் காவல் துறையினரின் செயல்பாடுகள் மீதும் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், சீன நடுவண் அரசின் தெளிவான நிலைப்பாடு, சட்டப்படி ஹாங்காங் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றும்.
தற்போது, ஹாங்காங்கில் காணப்படும் தீவிரமான வன்முறைச் செயல்கள், ஹாங்காங்கை ஆபத்தான நிலைமைக்குக் கொண்டு சென்றுள்ளது. எனவே, உடனடியாக ஒழுங்கை மீட்பது அவசியம். ஹாங்காங் அலுவல் சீன உள் விவகாரத்தைச் சேர்ந்தது. அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காப்பதில் சீனத் தரப்பின் மனவுறுதியை எவரும் தவறாக மதிப்பீடு செய்யக் கூடாது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்