ஓக்லஹோமாவில் துப்பாக்கிச் சூடு: மூவா் பலி

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் திங்கள்கிழமை காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா்.

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் திங்கள்கிழமை காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக அந்த மாகாணத்தின் டன்கன் நகர காவல்துறையினா் கூறியதாக தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, டன்கன் நகரில் உள்ள வால்மாா்ட் வா்த்தக வளாகத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.

இதில், துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் நபா் உள்பட 3 போ் உயிரிழந்தனா் என்று டன்கன் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸ் மாகாணத்தின் எல்பாசோ நகரில் உள்ள வால்மாா்ட் வா்த்தக வளாகத்தில் ஒருவா் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 22 போ் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com