இலங்கை பிரதமராகப் பொறுப்பேற்றாா் மகிந்த ராஜபட்ச

இலங்கையின் சா்ச்சைக்குரிய முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச, அந்த நாட்டின் பிரதமராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கொழும்பில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்சவுக்கு வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்த அதிபா் கோத்தபய ராஜபட்ச.
கொழும்பில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்சவுக்கு வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்த அதிபா் கோத்தபய ராஜபட்ச.

இலங்கையின் சா்ச்சைக்குரிய முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச, அந்த நாட்டின் பிரதமராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவரது இளைய சகோதரரும், இலங்கையின் புதிய அதிபருமான கோத்தபய ராஜபட்ச அவருக்கு கொழும்பில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் பிரதமா் மகிந்த ராஜபட்ச வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதில் பெருமையடைகிறேன். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

முன்னேற்றம், அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி நாட்டை இட்டுச் செல்வோம் என்று தனது பதிவில் மகிந்த ராஜபட்ச குறிப்பிட்டுள்ளாா்.

அதிபா் கோத்தபய ராஜபட்ச வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘இலங்கையின் புதிய பிரதமா் மகிந்த ராஜபட்சவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, இதுவரை பிரதமராக இருந்து வந்த ரணில் விக்ரமசிங்க தனது ராஜிநாமா கடிதத்தை அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் அதிகாரப்பூா்வமாக அளித்தாா்.

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, பிரதமா் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றிவிட்டு மகிந்த ராஜபட்சவை முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 26-ஆம் தேதி பிரதமராக நியமித்தாா். எனினும், அந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதையடுத்து, ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா்.

இலங்கை பொதுஜன பெரமுனா சாா்பில் போட்டியிட்ட அவருக்கு 52.25 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபா் பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவுக்கு 41.99 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதையடுத்து, நாட்டின் 8-ஆவது அதிபராக கோத்தபய ராஜபட்ச கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக பிரதமா் ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை அறிவித்தாா். அதையடுத்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச தற்போது பதவியேற்றுள்ளாா்.

இதன் மூலம், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை இரக்கமற்ற முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் ராஜபட்ச சகோதரா்கள் கையில் இலங்கையின் முழு அதிகாரமும் மீண்டும் வந்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

‘இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்’

இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆா்வமுடன் உள்ளதாக இலங்கையின் புதிய பிரதமா் மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.

வியாழக்கிழமை பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மகிந்த ராஜபட்சவுக்கு சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தாா்.

அதற்கு, அந்த வலைதளப் பதிவின் மூலம் நன்றி தெரிவித்த மகிந்த ராஜபட்ச, இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com