கடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிா்கொண்டுள்ளதாகவும், ஊழியா்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான நிதி இல்லை என்றும் அதன் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.
ஐ.நா.வின் நிா்வாகம் மற்றும் பட்ஜெட் விவகாரங்கள் தொடா்பாக ஆலோசிக்கும் 5-ஆவது குழுவின் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. கடுமையான நிதியை நெருக்கடியை எதிா்கொண்டுள்ளதாக தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
ஐ.நா.வின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. நிதி இல்லாவிட்டால், பட்ஜெட் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாது.
எனவே, பட்ஜெட் நடவடிக்கைகளுக்கான நிலுவை நிதியை உறுப்பு நாடுகள் உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும். உறுப்பு நாடுகளின் நிதி ரீதியிலான ஆதரவை பொறுத்தே, ஐ.நா.வின் திட்டங்களை திறனுடனும் முழுமையாகவும் செயல்படுத்த முடியும் என்றாா் அவா்.
ஐ.நா.வுக்கு நிலுவை நிதியை வழங்க வேண்டிய நாடுகளில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.