தாய்லாந்தில் அருவியில் தவறி விழுந்து 11 யானைகள் உயிரிழந்திருப்பது ட்ரோன் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் நக்கோன் நாயக் மாகாணத்தில் காவோ யாய் எனும் உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்குள்ள அருவியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. இதையடுத்து, அக்குட்டியானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன.
இந்த சம்பவத்தில் குட்டியானை உள்பட 6 யானைகள் பாறைகளில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மேலும் 5 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரியல் பூங்காவில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டபோது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 1992-ஆம் ஆண்டு இதே அருவியில் இருந்து விழுந்து 8 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.