சீன-இந்திய தலைவர்களின் முறைசாரா சந்திப்பு குறித்து, இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய் தொங் செய்தியாளர்களுக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில்,
கடந்த ஓராண்டுக்கு மேலாக, இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்கள் ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சீன-இந்திய உறவு, சீரான நிதான வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது. பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்பு, இரு நாட்டு உறவு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
சீன முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்குச் சீனா ஊக்கமளித்து வருகிறது. மேலும் நியாயமான நட்பார்ந்த வசதியான வணிகச் சூழலை இந்தியா வழங்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது என்றார்.
சீன-இந்திய உறவு, உலக மற்றும் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவது, ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சியையும் பல தரப்புவாதத்தையும் பேணிகாக்குமாறு இரு நாடுகளுக்கு சுன் வெய் தொங் வேண்டுகோள் விடுத்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்