செளத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மகள் மரியம் நவாஸ் மற்றம் உறவினர் யூசுஃப் அப்பாஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறையில் தனது தந்தையைச் சந்தித்துவிட்டு திரும்புகையில் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், அவரது உறவினர் யூசுஃப் கைது செய்யப்பட்டனர். பிறகு அதே லாகூரின் கோட் லாக்பத் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், செளத்ரி சர்க்கரை ஆலை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.