பாங்காக்: தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலங்கோன் தனது நான்காவது மனைவி சுதிதாவின் அரசி பட்டத்தை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
தாய்லாந்தின் மன்னராக நெடுங்காலமாக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அதையடுத்து அவரது மகன் மகா வஜ்ரலங்கோன் கடந்த மே மாதம் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார்.
அவர் தனது முடிசூட்டு விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, தனது பாதுகாவல் படையின் துணைத் தலைவரான இருந்த சுதிதாவை (வயது 40) அரச முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம், தாய்லாந்தின் அரசி என்ற பட்டத்தை சுதிதா முறைப்படி பெற்றார்.
இந்நிலையில் மகா வஜ்ரலங்கோன் தனது நான்காவது மனைவி சுதிதாவின் அரசி பட்டத்தை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
தாய்லாந்து அரசி என்பதைத் தவிர்த்து விமானி, செவிலி, ராணுவ தளபதி என பன்முக செயல்பாடுகளைக் கொண்டு விளங்கிய சுதிதா பேராசையுடன் செயல்பட்டதாகவும், மன்னருக்கு எதிராக செயல்பட்டதாகவும் மன்னர் வஜ்ரலங்கோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு அரசி அந்தஸ்து மற்றும் அரண்மனையில் வழங்கப்படும் மரியாதைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மன்னர் வஜ்ரலங்கோன் அறிவித்துள்ளார்.