ஜப்பானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஷூரி கோட்டையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெரும் பகுதி எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஜப்பானின் ஷுரி கோட்டையில், வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினா், 12 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினா்.
இந்த விபத்தில், கோட்டையில் இருந்த 3 பெரிய கூடங்களும், 4 கட்டடங்களும் தீக்கிரையாகின.
இதில், ஏராளமான அரும்பொருள்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது.
ஜப்பானின் ஒகினாவா பகுதி கலாசாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் பாரம்பரியம் மிக்க ஷூரி கோட்டையில் தீவிபத்து ஏற்பட்டது, அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.