மதகுருவும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியின் நிறுவனருமான தஹிருல் காத்ரி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், அவாமி தெஹ்ரீக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கனடாவில் வசித்து வரும் அவர், இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை நிர்வாகக் கவுன்சிலிடம் ஒப்படைத்துள்ளாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது முடிவுக்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.