அமெரிக்கா நடத்திய தாக்குதல் நடவடிக்கையில் அல்-காய்தா தலைவர் பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதை அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவரும், பின்லேடனின் மகனுமான ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார். ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக கடந்த மாதமே ஊடகங்கள் தெரிவித்த நிலையில், அந்தத்தகவலை தற்போது அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.