இங்கிலாந்தில் 4 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

இங்கிலாந்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டி 4,313 ஆக உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இங்கிலாந்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டி 4,313 ஆக உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஏப்ரல் 4-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1,83,190 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 41,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 3-ஆம் தேதி நிலவரப்படி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுள் 4,313 பேர் பலியாகியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com