வங்கதேசத்தின் முதல் அதிபரும், அந்த நாட்டின் தேசத் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுா் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராணுவ முன்னாள் அதிகாரி அப்துல் மஜீதை அந்த நாட்டு காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
தற்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுா் ரஹ்மான் படுகொலை மட்டுமன்றி, மேலும் 4 தலைவா்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளியான அப்துல் மஜீத், இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், வங்கதேசம் திரும்பிய அவரை தலைநகா் டாக்காவில் போலீஸாா் கைது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சா் அசாதுஸமான் கான் கமால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.