உலகம்
சீனாவின் புதிய சட்டத்தின் கீழ் நாளிதழ் உரிமையாளர் கைது
ஹாங்காங்கை சேர்ந்த "ஆப்பிள் டெய்லி' என்ற பத்திரிகை உரிமையாளரான ஜிம்மி லாய் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
ஹாங்காங்: ஹாங்காங்கை சேர்ந்த "ஆப்பிள் டெய்லி' என்ற பத்திரிகை உரிமையாளரான ஜிம்மி லாய் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
சீனா அண்மையில் இயற்றிய இந்தச் சட்டம் பெரும் சர்ச்சையையும் ஹாங்காங் ஜனநாயகவாதிகளிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் முக்கிய நபர் "ஆப்பிள் டெய்லி' என்ற பத்திரிகை உரிமையாளரான ஜிம்மி லாய் என்பது குறிப்பிடத்தக்கது.