அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகளால் பெர்லினில் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.
ஜெர்மன் தலைநகரான பெர்லினில் மர்ம நபர் ஒருவர் நேற்று (செவ்வாய்க் கிழமை) மாலை வாகனத்தை ஓட்டிவந்து மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
பின்னர் சிறிது தூரம் சென்று தேசிய நெடுஞ்சாலையில் தமது காரை நிறுத்தி காரின் மீது மர்ம பெட்டியை வைத்து அதனை வெடிக்கச் செய்வதாகவும் மிரட்டியுள்ளார்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், பெட்டியை அப்புறப்படுத்தியதில், அதில் வாகன உதிரி பாகங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் 300க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் நின்றுகொண்டிருந்தன. சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களால் அந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.