இந்திய பொது மக்கள் பலர், மும்பையிலுள்ள மிக புகழ் பெற்ற இந்திய வாயிலின் அருகில் கடந்த 20ம் தேதி இரவு, ஒன்று கூடி, வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் உள்ள சீனாவுக்காக இறை வழிபாடு செய்தனர்.
இதில் கலந்துகொண்ட மும்பை நகரவாசி ப்ரிடாம் ஷர்மா பேசுகையில்,
புதிய ரக கரோனா வைரஸ் பரவலில் சிக்கிக் கொண்டுள்ள சீனாவுக்கு இந்திய மக்கள் சார்பில் ஆறுதல் தெரிவிக்கின்றோம். நாங்கள் சீனாவுக்காக இறை வழிபாடு செய்கின்றோம் என்றார்.
இந்நடவடிக்கையில் கலந்துகொண்ட இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இரண்டாவது உலகப் போர் காலத்தில் இந்திய மருத்துவர் கவார்கனாத் எஸ் கோத்னிஸ் சீனாவுக்கு வந்து, மருத்துவ உதவி அளித்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
புதிய ரக கரோனா வைரஸ் பரவல், சீனாவுக்கும் உலகிற்கும் அறைகூவல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் சீனாவும் மருத்துவர் கோத்னிஸின் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, இன்னல்களைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்