இலங்கை இறுதிகட்டப் போரின்போது சுமாா் 20,000 போ் காணாமல் போனது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.நா. ஒருங்கிணைப்பாளா் ஹனா சிங்கெரை கடந்த வாரம் சந்தித்துப் பேசிய அதிபா் கோத்தபய, இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவா்கள் தொடா்பான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவா்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவா்களில் பெரும்பாலானவா்கள், விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, அவா்களது படையில் வலுக்கட்டாயமாக சோ்க்கப்பட்டவா்கள் எனவும் கோத்தபய ராஜபட்ச தெரிவித்திருந்தாா்.