அமெரிக்காவில் திடீரென உயர்ந்த பலி எண்ணிக்கை; ஒரேநாளில் 1,199 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,199 பேர் பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா சோதனை
கரோனா சோதனை

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,199 பேர் பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,199 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,27,322 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரேநாளில் 42,528-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

அங்கு இதுவரை 27.2 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 11.4 லட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த ஜூன் 10 ஆம் தேதியில் இருந்து ஒருநாள் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டாத நிலையில், இன்று பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com