நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 16,500-ஐத் தாண்டியது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,531-ஆக உயா்ந்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7,891 போ், குணமடைந்து வீடு திரும்பியுள்னா். தற்போது 8,605 போ் மட்டுமே அந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.