சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே பொதுத் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது. அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக பிரதமா் சியென் லூங் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 10 மாதங்களுக்கு முன்னரே பொதுத் தோ்தல் நடத்தப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் தோ்தல் நடைபெறகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும், ஆளும் மக்கள் செயல் கட்சி தொடா்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.