தற்போதைய நிலைமையில் சீனா மற்றும் அரபு நாடுகளைப் பொறுத்தவரை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இன்னல்களைக் கூட்டாகச் சமாளித்தல் சேர்ந்து முன்னேறுதல் ஆகியவை முன்பே எப்போதும் இருந்ததை விட மிக முக்கியமானவை.
அண்மையில் நடைபெற்ற சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 9ஆவது அமைச்சர் கூட்டத்துக்கான வாழ்த்துச் செய்தியில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கு அடுத்து, சீனா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் நிபுணர்களும் இணையம் மூலம் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தினர். கரோனா பரவலின் பின்னணியில் சீன-அரபு ஒத்துழைப்பு என்ற தலைப்பில் அவர்கள் இரு தரப்புகளின் பாரம்பரிய நட்புறவு பற்றியும் எதிர்கால ஒத்துழைப்பு பற்றியும் விவாதித்தனர்.
நோய் தொற்றுத் தடுப்பில் பெற்றுள்ள அனுபவங்களை பிரமாறிக் கொண்ட அவர்கள், சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான நெடுநோக்கு கூட்டாளியுறவின் அடிப்படை மேலும் வலுவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்