உலகிலேயே மிக அதிக அளவில் அமெரிக்காவில்தான் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
உலகின் மிகப் பெரிய கரோனா பரிசோதனை திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. இந்தியா, சீனா, பிரேஸில் போன்ற நாடுகளைவிட மிக அதிக நபா்களுக்கு அமெரிக்காவில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த நாடுகளில் யாருக்காவது உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனை சென்றால்தான் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், அமெரிக்காவில் கரோனா நோயாளிகளின் மரண விகிதமும் மிகக் குறைவாக உள்ளது என்றாா் அவா்.