சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 22ஆம் நாள் சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜி லின் மாநிலத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். வடகிழக்கு பகுதியின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட சி பிங் நகரை அவர் அன்று சென்றடைந்தார்.
பல்வேறு இடங்களில் நிலைமைக்கிணங்கக் கூட்டுறவுச் சங்கத்தை வளர்க்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சி பிங் நகரின் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த போது தெரிவித்தார். முன்னதாக விவசாயிகளின் வருமானத்தைப் பெரிதும் அதிகரித்து, அறிவியல் தொழில் நுட்பம் மூலம் வேளாண்துறையின் நவீனமயமாக்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்