தடுப்பூசி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, கொவைட்-19 நோய்க்கான தடுப்பூசி, மருந்து மற்றும் நோய் கண்டறிதல் ஆய்வில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருவதாகச் சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் தெரிவித்துள்ளார்.
உலகத்தடுப்பூசி உச்சிமாநாட்டில் 4ஆம் நாள் காணொலி வழி உரை நிகழ்த்திய அவர், உலகச் சுகாதார அமைப்பு தடுப்பூசி ஆய்வுப் பணிக்குத் தலைமை தாங்குவதற்குச் சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது என்று குறிப்பிட்டார்.
தடுப்பூசிக்கான மருத்துவ ஆய்வு மற்றும் சந்தையில் அதன் பயன்பாட்டைச் சீனா தூண்டி வருவதாகவும், உலகத்துக்குப் பாதுகாப்பு, மற்றும் தரத்துடன் கூடிய பயனுள்ள பொது உற்பத்திப் பொருட்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்