கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்தனர்.
இத்துடன், சீனாவில் அந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,177-ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட சுமார் 40 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 1,940 பேரையும் சேர்த்து உலகம் முழுவதும் அந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,118-ஆக அதிகரித்துள்ளது.
1,39,008 பேருக்குப் பாதிப்பு: இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 130 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,39,008-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.