இத்தாலிக்கான சீனத் துணைத் தூதரகம் மார்ச் 14ஆம் தேதி செய்தி ஒன்றைய வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின்படி,
இத்தாலி மற்றும் அந்நாட்டில் உள்ள சீனர்களின் முயற்சியுடன், சீனாவின் ட்செச்சியாங் மாநிலம் வழங்கிய 26.4 டன் எடையுள்ள வைரஸ் தடுப்புக்கான அத்தியாவசியப் பொருட்கள் 13ஆம் தேதி, துரினோ நகரைச் சென்றடைந்தது.
மிலானில் உள்ள சீனத் துணைத் தூதரகத் தலைவர் சொ சுயெய்ஃபான் 14ஆம் நாள் துரினோ நகருக்குச் சென்று, இப்பொருட்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்