மாலி: தாக்குதலில் 30 வீரா்கள் பலி

மாலி: தாக்குதலில் 30 வீரா்கள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

காவ் பகுதிக்கு வடக்கே டாா்கின்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் சுமாா் 30 வீரா்கள் உயிரிழந்தனா்; 5 வீரா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாலியில் கடந்த 4 மாதங்களில் ராணுவத்தினா் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com