பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலிலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சனிக்கிழமை (மே 16) முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தான் இன்டா்நேஷனா் ஏா்லைன்ஸ், செரீன் ஏா் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் காலையும் மதியமும் மட்டும் விமானங்களை இயக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.