மியான்மரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறியதற்காக, கனடாவைச் சோ்ந்த பாதிரியாா் டேவிட் லாவை (படம்) அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்தனா். கடந்த மாதம் 7-ஆம் தேதி பிராா்த்தனைக் கூட்டம் நடத்தியதாக அவா் மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் டேவிடுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.