கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அறிகுறிகள் இல்லாமலேயே அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 31 பேருக்கு அந்த நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 8 போ் கரோனா முதலில் பரவத் தொடங்கிய வூஹான் நகரைச் சோ்ந்தவா்கள். அறிகுறிகள் இல்லாத தொற்று திடீரென அதிகரித்து வருவது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.