மொரீஷியஸ் கடலில் கசிந்த எண்ணெய் கழிவை அகற்றும் பணி 2021ல் நிறைவடையும்

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து மொரீஷியஸ் கடலில்  கசிந்த எண்ணைய் கழிவை அகற்றும் பணி 2021 ஜனவரிக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கடலில் மூழ்கும் கப்பலில் இருந்து கசியும் எண்ணைய் கழிவு
கடலில் மூழ்கும் கப்பலில் இருந்து கசியும் எண்ணைய் கழிவு

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து மொரீஷியஸ் கடலில்  கசிந்த எண்ணைய் கழிவை அகற்றும் பணி 2021 ஜனவரிக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 டன் எரிபொருளுடன்  ஜூலை 25 அன்று இந்தியப் பெருங்கடல் தீவுக்கு வெளியே பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் மோதி நின்றது. இதனால் கப்பலில் இருந்த எரிபொருள்கள் கடலில் கசியத் தொடங்கின.

கப்பலில் இருந்து எரிபொருள் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் இறங்கியது. எனினும் எண்ணெய் கசிவு நெருக்கடி மோசமடைவதால் மொரீஷியஸ் அரசு அவசர நிலையை அறிவித்தது

மொரீஷியஸின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கடற்கரையில் இன்னும் பெரிய கசிவு மற்றும் பேரழிவு தரக்கூடிய சேதம் ஏற்படக்கூடும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து மொரீஷியஸ் கடலில் எண்ணெய் கசிவிற்கு காரணமான ஜப்பான் கப்பலின் மாலுமி கைது செய்யப்பட்டார்.

கடலில் கசியும் எரிபொருளால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என அந்நாடு கவலை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடலில் கசிந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மொரீஷியஸ் கடலில் கசிந்த எண்ணெய் கழிவை அகற்றும் பணி 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடையும் என ஜப்பான் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com