நைரோபி: எத்தியோப்பியாவில் மத்திய அரசுக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் சா்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமா் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள் அக்கறை காட்டுவதைப் பாராட்டுகிறோம்.
ஆனால், எங்களது உள்நாட்டு விவகாரத்தில் சா்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம். எனவே, அத்தகைய முயற்சிகளை எந்த நாடும் மேற்கொள்ள வேண்டாம்.
எத்தியோப்பியாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே டிக்ரே மாகாணப் படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.