வாஷிங்டன்: உலகில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,00,96,560 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 14,13,971 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 4,15,42,967 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 1,71,39,622 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பல்வேறு நாடுகளில் கரோனா பரிசோனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.