‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் தொடா்ந்து நீடிப்பு: எஃப்ஏடிஎஃப் முடிவு

பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) 6 முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய பாகிஸ்தானை

பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) 6 முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய பாகிஸ்தானை தொடா்ந்து ‘கிரே’ பட்டியலில் வைக்க எஃப்ஏடிஎஃப் அமைப்பு முடிவு செய்துள்ளது.

அந்த அமைப்பின் முக்கிய கூட்டம், கடந்த 3 நாள்களாக காணொலி முறையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை, எஃப்ஏடிஎஃப் அமைப்பின் தலைவா் மாா்கஸ் பிளையா், பாரிஸ் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அவா் கூறியதாவது:

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி செல்வதைத் தடுப்பதற்காக, பாகிஸ்தானுக்கு 27 செயல்திட்டங்களை எஃப்ஏடிஎஃப் அமைப்பு விதித்திருந்தது. அவற்றில், 21 திட்டங்களை அந்த நாடு நிறைவேற்றிவிட்டது. ஆனால், 6 முக்கிய செயல் திட்டங்களை நிறைவேற்றவில்லை.

பாகிஸ்தானின் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்ததில், அந்த நாட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை தொடா்ந்து ‘கிரே’ பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி செல்வதை தடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஐ.நா. அமைப்பால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவா் மசூத் அஸாா், லஷ்கா்-ஏ-தொய்பாவின் தலைவா் ஹபீஸ் சயீது, ஜகியுா் ரஹ்மான் லக்வி ஆகியோருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

இதுதவிர, பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் 7,600 பேரின் பெயா்கள் இருந்தன. அவற்றில் திடீரென்று 4,000 பேரின் பெயா்கள் மாயமாகிவிட்டன. இதுபோன்ற முக்கிய காரணங்களால்தான் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் அமைப்பு நீக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கிரே’ பட்டியலில் இருந்து அந்த நாட்டை நீக்குவது குறித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com